sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கருங்கற்கள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்

/

கருங்கற்கள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்

கருங்கற்கள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்

கருங்கற்கள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்


ADDED : ஜன 29, 2025 10:54 PM

Google News

ADDED : ஜன 29, 2025 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அருகே, அனுமதி சீட்டு இல்லாமல், கருங்கற்களை ஏற்றி வந்த லாரிகளை, கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தனர்.

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் இருந்து உரிய அனுமதி இல்லாமல், கனிமவளங்கள் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்படுவதாக புகார் உள்ளது. இந்நிலையில், நேற்று கனிமவளத்துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் பாலாஜி தலைமையிலான குழுவினர், மைவாடி அருகே நான்கு வழிச்சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, கருங்கற்களை ஏற்றி வந்த இரு லாரிகளை தணிக்கை செய்த போது, உரிய அனுமதி இல்லாமல், பழநி, சின்னகலையமுத்துாரில் இருந்து இடையர்பாளையத்துக்கு கருங்கற்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, டிஎன் 99 ஏசி 6213; டிஎன் 99 ஏசி 2545 பதிவு எண் உள்ள லாரிகளை பறிமுதல் செய்து, மடத்துக்குளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் லாரி டிரைவர்கள், மணிகண்டன், 28; சமீர், 35 ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us