ADDED : ஜூலை 15, 2025 08:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; அமராவதி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்குகள் பொருத்த பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை அருகே மடத்துக்குளத்தில் அமராவதி ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது. இப்பாலத்தின் வழியாக தென்மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி உள்ளது. எனவே, பாலத்தில், மின்விளக்குகள், பிரதிபலிப்பான் அமைக்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.