sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உடுமலையில் பைக் விபத்து இரு மாணவர்கள் மரணம்

/

உடுமலையில் பைக் விபத்து இரு மாணவர்கள் மரணம்

உடுமலையில் பைக் விபத்து இரு மாணவர்கள் மரணம்

உடுமலையில் பைக் விபத்து இரு மாணவர்கள் மரணம்


ADDED : ஏப் 17, 2025 02:13 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை அருகே, குடிநீர் குழாய் பராமரிப்புக்கு தோண்டிய மண் திட்டில் பைக் மோதிய விபத்தில் கல்லுாரி மாணவர்கள் இருவர் பலியாகினர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சின்னவாளவாடியை சேர்ந்த பூவரசன், 20, பத்ரிகுமார், 20, கவுதம், 20, ஆகியோர் அரசு கல்லுாரியில், இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு, ஒரே பைக்கில் மூன்று பேரும், பழையூரிலிருந்து வாளவாடிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, ரோட்டோரத்தில் குடிநீர் குழாய் சரி செய்வதற்காக தோண்டப்பட்டிருந்த மண் திட்டின் மீது மோதி கீழே விழுந்தனர்.

தலையில் பலத்த காயமடைந்த பூவரசன், பத்ரி குமார் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த கவுதம் உடுமலை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us