நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூர், பழையகோட்டையை சேர்ந்தவர் சேகர், 45. முத்துார் பஸ் ஸ்டாண்ட் எதிரில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், இவருக்கு சொந்தமான டூவீலரை கடை முன் நிறுத்தி வைத்திருந்தார்.
அருகில் உள்ள பேக்கரிக்கு டீ சாப்பிட சென்று விட்டு திரும்பினார். அப்போது, டூவீலர் திருடு போனது தெரிந்தது. வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.