sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வரி உயர்வால் வார்டில் தலை காட்ட முடியல' : நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் புலம்பல்

/

'வரி உயர்வால் வார்டில் தலை காட்ட முடியல' : நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் புலம்பல்

'வரி உயர்வால் வார்டில் தலை காட்ட முடியல' : நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் புலம்பல்

'வரி உயர்வால் வார்டில் தலை காட்ட முடியல' : நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் புலம்பல்


ADDED : ஜூலை 16, 2025 11:33 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், அதன் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மோகன், கமிஷனர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் பேசியதாவது:

கோபாலகிருஷ்ணன் (காங்.,): ஏற்கனவே தமிழக அரசு ஆண்டுக்கு, 6 சதவீதம் வரி உயர்வு உயர்த்தியுள்ளது. தற்போது நகராட்சி நிர்வாகத்தின் புதிய வரி விதிப்பை பொதுமக்கள் எவ்வாறு ஏற்க முடியும். வள்ளுவர் வீதி, ஸ்ரீராம் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில், 1965ல், க.ச.எண் 183 -1ஏ- வில் 4.76 ஏக்கர் நிலத்தில், 3 ஏக்கருக்கு மட்டும் 'டிடிசிபி' அனுமதி பெற்று மனை பிரிவுகளாக செய்தனர். அதில், 33 சென்ட் ரிசர்வ் சைட்டாக, ஒப்படைத்தனர். அதற்கு கம்பி வேலி அமைத்த பின், அனுமதி வழங்க வேண்டும். இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்

சித்ரா (அ.தி.மு.க.,): -சொத்து வரி ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்தப்பட்டு வசூலித்து வரும் நிலையில், புதிதாக கட்டும் கட்டடங்களுக்கு, 5 சதவீத வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 4 மாதமாகியும் சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்படாதால் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. வரி உயர்வை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம்.

ஸ்ரீதேவி (அ.தி.மு.க.,): பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. விரைவில், செயல்பாட்டுக்கு வரவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம்.

தங்கவேலு (தி.மு.க.,): சிந்தாமணி தியேட்டர் எதிரிலுள்ள இரண்டு வீதிகளிலும் ரோடு போட வேண்டும். தொடர்ந்து வரி உயர்வு உயர்த்தப்பட்டதால் வார்டு பகுதிகளில் கவுன்சிலர்கள் தலை காட்ட முடியவில்லை. மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் பெரும் அவமானமாக உள்ளது.

திருமுருகநாதன்(தி.மு.க.,): அவிநாசியில் உள்ள 3 ஆயிரம் தொழில் நிறுவனங்களில், 300க்கு மட்டுமே வரி போடப்பட்டுள்ளது. அதிலிருந்து வரி வசூல் செய்தால் பொதுமக்கள் மீது சுமத்தப்படும் மற்ற வரியினங்கள் குறைக்கலாம்.

தனலட்சுமி (நகராட்சி தலைவர்): முன்னர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் செயல்பட்டு வந்த பள்ளிகள், இப்போது நகராட்சி பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்காகவே கல்வி வரி உயர்த்தப்படுகிறது. பழைய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.






      Dinamalar
      Follow us