ADDED : ஜூலை 16, 2025 09:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை வட்டார அரசு துவக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, நலத்திட்ட உதவியாக சீருடை வழங்கப்படுகிறது. ஒரு கல்வியாண்டுக்கு நான்கு செட் வீதம் வழங்கப்படுகிறது. உடுமலை வட்டாரத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில் பள்ளி துவங்கியதும் முதல் இரண்டு செட் சீருடைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து மூன்று மற்றும் நான்காவது செட் சீருடைகள் தற்போது பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.