sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'சீரான மின் கட்டணம் ஊழல் குறைய வழி'

/

'சீரான மின் கட்டணம் ஊழல் குறைய வழி'

'சீரான மின் கட்டணம் ஊழல் குறைய வழி'

'சீரான மின் கட்டணம் ஊழல் குறைய வழி'


ADDED : ஜூன் 12, 2025 12:32 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : 'ஒரே மாதிரியான மின் கட்டணம் விதித்தால், ஊழல் குறையும்' என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறினார்.

அவர் கூறியதாவது:

தமிழக மின்வாரியம் கடனில் தத்தளிக்கிறது. மின் இணைப்புகளுக்கு வெவ்வேறு கட்டணம் விதிப்பது, இலவச மின்சாரம் போன்ற நடைமுறைகள் தான் காரணம். விவசாயம் மற்றும் குடிசைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

குடியிருப்பு, தொழிற்சாலை, வர்த்தகம், உள்ளாட்சிகளில் தெரு விளக்கு, மின் மோட்டார் பயன்பாடு என பல விகிதாச்சாரத்தில் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதான், முறைகேடு மற்றும் ஊழலுக்கு காரணமாக அமைகிறது.

விவசாய கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தினால் இலவச மின்சாரம் அவசியமில்லை. அதோடு, வருமான வரி விலக்கு, மானியம், கடன், தள்ளுபடி, நிவாரணம் என எதையும் விவசாயிகள் எதிர்பார்க்க வேண்டியதில்லை. மத்திய, மாநில அரசுகள் இதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us