sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'அகற்றப்படாத சாய்ந்த மரங்கள்'

/

'அகற்றப்படாத சாய்ந்த மரங்கள்'

'அகற்றப்படாத சாய்ந்த மரங்கள்'

'அகற்றப்படாத சாய்ந்த மரங்கள்'


ADDED : ஏப் 09, 2025 11:33 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல கூட்டம் தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் கணேசன், முன்னிலை வகித்தார்.

கவுன்சிலர்கள் பேசியதாவது:

சகுந்தலா(அ.தி.மு.க.,) : குடிநீர் 8 நாட்களுக்கு ஒரு முறையே வினியோகிக்கப்படுகிறது. எங்கள் வீதியில் அறுவை சிகிச்சைக்காக 11 நாய்களை பிடித்து சென்றனர். அறுவை சிகிச்சை முடிந்து 11 நாய்களுக்கு பதிலாக 15 நாய்களை விட்டு சென்றுள்ளனர்.

நாகராஜ், (ம.தி.மு.க) : பாதாள சாக்கடை பணி சரியாக செய்யவில்லை. மின் வாரியத்திற்கு பணம் கட்டியும் தெருவிளக்கு பொருத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

குணசேகரன், (பா.ஜ) : தெரு விளக்குகளை விரைவில் பொருத்தவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம். குப்பை சரியாக எடுப்பதில்லை. குப்பை எடுப்பதில் ஊழல் நடக்கிறது.

தலைவர்: 26 வது வார்டு பெரியது; சுகாதார அலுவலர் பார்வையிட்டு சுகாதார பிரச்னையை தீர்க்க வேண்டும்.

தங்கராஜ், (அ.தி.மு.க.,) : ஞாயிறன்று சூறைக்காற்று 70 மரங்கள் சாய்ந்தன. அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. பாட்டையப்பன் நகரில் குடிநீர் கசிவு மூன்று மாதங்களாக சீர் செய்யப்படாமல் உள்ளது. சப்பை தண்ணீர் மோட்டார் பழுதாகி இரண்டு மாதங்களாகிறது. இன்னும் சரி செய்யப்படவில்லை.

ரவிச்சந்திரன், (இ.கம்யூ): குப்பை பிரச்னை நீடிக்கிறது. பாதாள சாக்கடை இணைப்பிற்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வாங்குகின்றனர். முறையான கட்டணம் எவ்வளவு என்பதை கூற வேண்டும்.

செல்வராஜ், (இ.கம்யூ) : ஒரு பெண் துாய்மை பணியாளருக்கு நாள் ஒன்றுக்கு 550 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் 360 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.

இவ்வாறு, விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us