/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செஞ்சிலுவை சங்கத்தை புதுப்பிக்க வலியுறுத்தல்
/
செஞ்சிலுவை சங்கத்தை புதுப்பிக்க வலியுறுத்தல்
ADDED : செப் 20, 2024 10:01 PM
உடுமலை: அரசு பள்ளிகளில், செஞ்சிலுவை சங்கங்களை மீண்டும் புதுப்பிக்கும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பாடத்தோடு சேவை மனபான்மையை மேம்படுத்துவதற்கான ஒரு பகுதியாக, ஜே.ஆர்.சி., எனப்படும் இளம் செஞ்சிலுவை சங்கம் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத்தருவதோடு, ஆபத்து காலத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது, ரத்த தானம், பெண் குழந்தைகளுக்கான உரிமைகள், குழந்தைகளை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வது, விபத்துகளின் போது முதலுதவி செய்வது குறித்தும் செஞ்சிலுவை சங்க செயல்பாடுகள் உள்ளது.
அரசு துவக்கம் முதல் மேல்நிலை வரை, அனைத்து பள்ளிகளிலும் செஞ்சிலுவை சங்கம் துவங்குவதற்கு முன்பு அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் பள்ளிகளில் துவக்கப்பட்டது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு என எதுவும், அரசின் சார்பில் வழங்கப்படவில்லை. இதனால், 90 சதவீத பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. மீதமுள்ள பள்ளிகளிலும் பெயரளவில், மட்டுமே உள்ளன.
மாணவர்களிடம் ஆர்வம் இருந்தாலும், அதை மேம்படுத்தி, அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு செல்ல, அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் திட்டம் துவக்கத்தோடு முடங்கி விட்டது.
திட்டத்தை பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்த, அரசின் சார்பில், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கல்வியாளர்களும்,பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.