sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மழைநீர் சேகரிப்புக்கு பயனில்லாத போர்வெல்!  திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு

/

மழைநீர் சேகரிப்புக்கு பயனில்லாத போர்வெல்!  திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு

மழைநீர் சேகரிப்புக்கு பயனில்லாத போர்வெல்!  திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு

மழைநீர் சேகரிப்புக்கு பயனில்லாத போர்வெல்!  திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு


ADDED : ஜன 16, 2024 11:55 PM

Google News

ADDED : ஜன 16, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;'கிராமங்களில் பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்ட போர்வெல்களை, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்றினால் பயனுள்ளதாக இருக்கும்,' என கோரிக்கை எழுந்துள்ளது.

குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளில், ஆறு உட்பட நீராதாரங்கள் இல்லாத நிலையில், குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக இருந்தது. கிராமங்களில், ஊராட்சி சார்பில், ஒன்றிய பொது நிதி உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ், குடிநீர் தேவைக்காக போர்வெல்கள் அமைக்கப்பட்டன.

போர்வெல்களில், கோடை காலத்தில், தண்ணீரின்றி வறட்சி ஏற்படுவதும், மீண்டும் அவற்றை ஆழப்படுத்துவது, புதிய போர்வெல் அமைக்கும் பணிகள் சுழற்சி முறையில், தொடர்ந்து செய்யப்பட்டு வந்தது.

நீண்ட கால கோரிக்கைக்கு பின், திருமூர்த்தி அணையிலிருந்து, குடிமங்கலம் ஒன்றியத்துக்கென தனியாக கூட்டுக்குடிநீர் திட்டம், 2017ல் செயல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, பெரும்பாலான போர்வெல்களின் பயன்பாடு குறைந்துள்ளது. குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், முறையான பராமரிப்பு இல்லாமல் நுாற்றுக்கணக்கான போர்வெல்கள் உள்ளன.

மின் இணைப்பு இல்லாதது; மோட்டார் பழுது என பல போர்வெல்கள் இயக்கப்படாமல் உள்ளன. சில கிராமங்களில் மட்டும், கூட்டுக்குடிநீர் திட்டத்தில், பற்றாக்குறையாக குடிநீர் வரும் போது, போர்வெல் தண்ணீரை குடியிருப்புகளுக்கு வினியோகிக்கின்றனர்.

இந்நிலையில், பயன்பாடு இல்லாமல், வீணாக இருக்கும் போர்வெல்களை, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சராசரியாக, 500 அடிக்கும் அதிகமான ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களில், நேரடியாக உள்ளிறக்கியும், சுற்றிலும், ஜல்லிக்கற்களை நிரப்பியும், மழை நீரை தேக்கி சேமிக்கலாம்.

இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், போர்வெல் பராமரிப்பு என்ற பெயரில், அதிகளவு செலவிடப்படும், ஊராட்சி நிதியும் சேமிக்கப்படும். இதுகுறித்து, குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us