sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வந்தே பாரத்' ரயில் இயக்கம் பிப்., இறுதி வரை நீட்டிப்பு 

/

'வந்தே பாரத்' ரயில் இயக்கம் பிப்., இறுதி வரை நீட்டிப்பு 

'வந்தே பாரத்' ரயில் இயக்கம் பிப்., இறுதி வரை நீட்டிப்பு 

'வந்தே பாரத்' ரயில் இயக்கம் பிப்., இறுதி வரை நீட்டிப்பு 


ADDED : பிப் 01, 2024 12:04 AM

Google News

ADDED : பிப் 01, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : கடந்தாண்டு நவ., 28 முதல், கோவையில் இருந்து சென்னைக்கு செவ்வாய்தோறும் வந்தே பாரத் ரயில் (எண்:06035) இயக்கப்பட்டு வருகிறது. காலை, 7:10 மணிக்கு சென்னையில் புறப்படும் ரயில் மதியம், 2:15 மணிக்கு கோவை வந்தடைகிறது; மறுமார்க்கமாக மதியம், 3:05 மணிக்கு கோவையில் புறப்பட்டு, இரவு, 9:50 மணிக்கு சென்னை சென்று சேர்கிறது.

முந்தைய அறிவிப்பின்படி, நேற்று முன்தினத்துடன் (30ம் தேதி) 'வந்தே பாரத் ரயிலுக்கான இயக்கம் முடிந்த நிலையில், பிப்., 6 முதல், 27ம் தேதி வரையிலான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி. பிப்., 27ம் தேதி வரை, தொடர்ந்து செவ்வாய்தோறும் 'வந்தே பாரத'் ரயில் இயங்கும்.

தற்போது, புதன் தவிர, வாரத்தின் ஆறு நாட்கள் கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் (எண்: 20644) இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் சேலத்தில் இருந்து எங்கும் நிற்காமல் சென்னை செல்கிறது. அதேநேரம், செவ்வாய்தோறும் இயக்கப்படும் 'வந்தேபாரத்' ரயில் சேலம் கடந்த பின் ஜோலார்பேட்டை, காட்பாடியில் நின்று செல்லும்.






      Dinamalar
      Follow us