/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் : திருப்பூர் அருகே வி.ஏ.ஓ. கைது
/
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் : திருப்பூர் அருகே வி.ஏ.ஓ. கைது
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் : திருப்பூர் அருகே வி.ஏ.ஓ. கைது
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் : திருப்பூர் அருகே வி.ஏ.ஓ. கைது
ADDED : அக் 31, 2025 06:20 AM

திருப்பூர்:  திருப்பூர் அருகே, பட்டா மாறுதல் செய்ய விவசாயியிடம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 38; விவசாயி. இவருக்குச் சொந்தமான நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தார்.
விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்க காட்டூர் வி.ஏ.ஓ., ஜெயக்குமார், 51 என்பவரை ராமமூர்த்தி அணுகினார்; ஜெயக்குமார்,  40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முதல் தவணையாக 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாவது தவணையாக 13 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 23 ஆயிரம் ரூபாய் பணத்தை ராமமூர்த்தி கொடுத்துள்ளார்.இருப்பினும் பேசிய தொகையை முழுமையாகத் தர வேண்டும் என ஜெயக்குமார் வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து ராமமூர்த்தி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய 17 ஆயிரம் ரூபாயை அவர் தயாராக வைத்திருந்தார். நேற்று மதியம் தனது தோட்டத்துக்கு ஜெயக்குமாரை வரவழைத்தார். அங்கு அவர் லஞ்சப் பணத்தைப் பெற்ற போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வி.ஏ.ஓ., ஜெயக்குமாரை கைது செய்தனர். அவரிடம் டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

