sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பட்டா மாற்ற ரூ.40,000 லஞ்ச வி.ஏ.ஓ.,வுக்கு 'காப்பு'

/

பட்டா மாற்ற ரூ.40,000 லஞ்ச வி.ஏ.ஓ.,வுக்கு 'காப்பு'

பட்டா மாற்ற ரூ.40,000 லஞ்ச வி.ஏ.ஓ.,வுக்கு 'காப்பு'

பட்டா மாற்ற ரூ.40,000 லஞ்ச வி.ஏ.ஓ.,வுக்கு 'காப்பு'


ADDED : அக் 31, 2025 12:31 AM

Google News

ADDED : அக் 31, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: பட்டா மாறுதல் செய்ய விவசாயியிடம், 40,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் அடுத்த காட்டூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 38, விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய, ஆன்லைனில் விண்ணப்பித்தார்.

விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்க, காட்டூர் வி.ஏ.ஓ., ஜெயக்குமார், 51, என்பவரை ராமமூர்த்தி அணுகினார். ஜெயக்குமார், 40,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. 23,000 ரூபாயை ராமமூர்த்தி கொடுத்தார். இருப்பினும் பேசிய தொகையை முழுமையாக தர வேண்டும் என ஜெயக்குமார் வற்புறுத்தினார்.

இதையடுத்து, ராமமூர்த்தி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆலோசனையில், நேற்று மதியம் தன் தோட்டத்துக்கு ஜெயக்குமாரை வரவழைத்து, அவரிடம், 17,000 ரூபாயை கொடுத்தார். மறைந்திருந்த போலீசார், ஜெயக்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us