/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் சந்தையில், ரூ.10.73 கோடிக்கு காய்கறி விற்பனை
/
உழவர் சந்தையில், ரூ.10.73 கோடிக்கு காய்கறி விற்பனை
உழவர் சந்தையில், ரூ.10.73 கோடிக்கு காய்கறி விற்பனை
உழவர் சந்தையில், ரூ.10.73 கோடிக்கு காய்கறி விற்பனை
ADDED : மே 04, 2025 12:31 AM
திருப்பூர்: திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தையில் கடந்த ஏப்ரல் மாதத்தில், 10.73 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகியுள்ளது.
திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின் உள்ள வடக்கு உழவர் சந்தையில், கடந்த ஏப்., மாதத்தில், 825 மெட்ரிக் டன் காய்கறி, 3.03 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. விளை பொருட்களை, 3,159 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
பல்லடம் ரோட்டில் உள்ள தெற்கு உழவர் சந்தையில், 2,191 டன் காய்கறி வரத்தாக இருந்தது. காய்கறி, பழங்கள், கீரை வகை என பல்வேறு விதமான விளை பொருட்களுடன், 8,099 விவசாயிகளும், 1.28 லட்சம் வாடிக்கையாளர்களும் சந்தைக்கு வந்தனர். ஒரு மாதத்தில், ஏழு கோடியே, 70 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகியுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு இரண்டு சந்தைகளுக்கும் சேர்த்து, 10.73 கோடிக்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.
முந்தைய மாதத்தோடு ஒப்பிடுகையில் வடக்கு சந்தைக்கு வரத்து, 798 டன்னில் இருந்து 825 டன்னாகவும், தெற்கு உழவர் சந்தைக்கு, 2,161 ல் இருந்து, 2,191 ஆக வரத்து உயர்ந்துள்ளது. இரு சந்தைக்கும் விவசாயிகள் எண்ணிக்கை குறையவில்லை. காய்றிகள் விலை குறைவால், கூடுதலாக வாங்கி பலரும் இருப்பு வைத்துக் கொண்டுள்ளனர்.
விவசாயிகள் எதிர்பார்த்த விலை தக்காளி உட்பட பெரும்பாலான காய்கறிகளுக்கு கிடைக்காததால், தெற்கு உழவர் சந்தையின் வருவாய், 8.14 கோடியில் இருந்து, 7.70 கோடியாகவும், வடக்கு உழவர் சந்தையின் வருவாய், 3.22 கோடியில் இருந்து, 3.03 கோடியாக குறைந்து விட்டது.