sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் தொழில்துறைக்கு வலிமை சேர்ப்பார் துணை ஜனாதிபதி சி.பி.ஆர்.

/

திருப்பூர் தொழில்துறைக்கு வலிமை சேர்ப்பார் துணை ஜனாதிபதி சி.பி.ஆர்.

திருப்பூர் தொழில்துறைக்கு வலிமை சேர்ப்பார் துணை ஜனாதிபதி சி.பி.ஆர்.

திருப்பூர் தொழில்துறைக்கு வலிமை சேர்ப்பார் துணை ஜனாதிபதி சி.பி.ஆர்.


ADDED : அக் 30, 2025 01:02 AM

Google News

ADDED : அக் 30, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ''திருப்பூரை சேர்ந்தவர் துணை ஜனாதிபதியாகி, மத்திய அரசில் அரணாக இருப்பது, திருப்பூர் தொழில்துறைக்கு வலிமை சேர்க்கும்,'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் பேசினார்.

திருப்பூர் பீப்பிள்ஸ் போரம், தொழில் அமைப்புகள் சார்பில், துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு பாராட்டு விழா திருப்பூரில் நேற்று நடந்தது.

தொழில்துறைக்கு வலிமை திருப்பூர் மக்கள் சார்பில், ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல், நினைவு பரிசு வழங்கி பேசியதாவது:

திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றதை கொண்டாடும் நிகழ்வு, திருப்பூர் மாநகரின் பெருமையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இது, தேச வரலாற்றில் பெருமை மிகு அத்தியாயம். எத்தகைய பதவிகள் வந்தாலும், அவரின் பணிவு பேற்றுதலுக்குரியது. இளம் வயதில் இருந்தே, தலைமைத்துவம், தொலைநோக்கு பார்வை, தன்னம்பிக்கை, முயற்சி ஆகிய குணங்களால் சிறந்து விளங்குகிறார். எளிமையும், ஒழுக்கமும், தன்னம்பிக்கையும், பொது வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந் துள்ளது.

நாடு முழுவதும் மதிக்கப்படும் அவர், தன்னை உருவாக்கிய திருப்பூர் நகரம் மற்றும் நகர மக்களுடன் ஆழமாக இணைந்திருக்கிறார். திருப்பூரை சேர்ந்தவர் துணை ஜனாதிபதியாகி, மத்திய அரசில் அரணாக இருப்பது, திருப்பூர் தொழில்துறைக்கு வலிமை சேர்க்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

பெருமை கொள்ளும் தொழில்துறை தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் சண்முகசுந்தரம் பேசுகையில்,''திருப்பூரில் தயாரிக்கும் ஆடை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றிருப்பது போல், சி.பி.ராதாகிருஷ்ணனும், படிப்படியாக உயர்ந்து, துணை ஜனாதிபதியாக உயர்ந்து திருப்பூருக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார். தேசப்பற்று, தெளிந்த பார்வையுடன், படிப்படியாக முன்னேறி, உயர் பதவிக்கு சென்றுள்ளார்,'' என்றார்.

அமெரிக்க ஏற்றுமதி இரு மடங்காகும்

துணை ஜனாதிபதி ராதா கிருஷ்ணன் பேசியதாவது: திருப்பூரில், எதிர்கால ஏற்றுமதி என்னவாகும் என, பலருக்கும் மனக்கவலை இருக்கிறது. சாயத்தொழிலுக்கு பெரிய சோதனை வந்த போது, ஒன்றாக இணைந்து முயற்சித்து முறியடித்தோம். கருணாநிதி முதல்வராக இருந்த போது, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கினார். ஜெயலலிதாவும், எந்தனையோ முறை திருப்பூருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கினார். ஏற்றுமதியாளருக்கான 'டிராபேக்'கை குறைத்த போது, மத்திய அமைச்சர் சின்ஹாவை சந்தித்து சரிசெய்தோம். அதுபோன்ற பிரச்னைகள், உள்நாட்டு தலைவர்களால் தீர்வு காணும் பிரச்னையாக இருந்தன. தற்போதைய அமெரிக்க வரி உயர்வு பிரச்னை மிகப்பெரியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன நினைக்கிறார் என்று அவருக்கே தெரிவதில்லை. அவர் விதித்த வரியை, சிறிய தொழில் நகரமாக திருப்பூர் தாங்குமா என்று புரியவில்லை. நிச்சயமாக தாங்க முடியாது என்பது புரிகிறது; இருப்பினும், யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்.மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை, இதுதொடர்பாக மூன்றுமுறை சந்தித்து பேசினேன். 'பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது; பரஸ்பரம் கருத்து பரிமாற்றம் நடக்கிறது' என்று கூறினார். 'விவ சாயத்துக்கு அடுத்தபடியாக, ஜவுளித்தொழிலில்தான் உழைக்கும் மக்கள் அதிகம் உள்ளனர். உழைப்பாளர்கள் ஒருபோதும் வீண்போக மாட்டார்கள். நிச்சயம் உங்கள் முயற்சிகள் அனைத்தும் ஜவுளித்தொழிலையும், விவசாயத்தையும் காப்பாற்றும்; அமெரிக்கா முழு ஒத்துழைப்பு கொடுக்கும்' என்று அவரிடம் நம்பிக்கை தெரிவித்தேன். அமெரிக்க வரி உயர்வு பிரச்னை நமது கையில் இல்லை; இக்கட்டான சூழல் நிலவுகிறது. நமது பிரச்னையாக இருந்தால் தீர்வு கண்டிருப்போம். உழைப்பு என்றும் வீண் போகாது; அமெரிக்காவின் ஏற்றுமதி, தற்போதுள்ளதை காட்டிலும் இருமடங்காக உயரும் நாள் விரைவில் வரும், என்றார்.








      Dinamalar
      Follow us