/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டில் சாதித்த வித்ய விகாஸ் மாணவியர்
/
விளையாட்டில் சாதித்த வித்ய விகாஸ் மாணவியர்
ADDED : நவ 22, 2025 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: இந்திய தடகள சம்மேளனம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் வழிகாட்டுதல்படி, திருப்பூர் மாவட்ட அளவிலான அஷ்மிதா தடகள போட்டிகள், சிக்கண்ணா கல்லுாரி வளாகத்திலுள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், பங்கேற்ற திருப்பூர், குளத்துப்பாளையம் வித்ய விகாஸ் மெட்ரிக் பள்ளி மாணவிகள், ஜெசிகா குண்டு எறிதலில் முதலிடம், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஈட்டி எறிதலில், ஹர்ஷிதா முதலிடமும், விகாஷினி இரண்டாமிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். சாதித்த மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

