/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதிய பஸ்கள் இன்றி கிராம மக்கள் தவிப்பு
/
போதிய பஸ்கள் இன்றி கிராம மக்கள் தவிப்பு
ADDED : ஏப் 01, 2025 10:19 PM
உடுமலை; உடுமலையிலிருந்து கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், மக்கள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
தற்போது மக்கள் தங்கள் பயணத்துக்கு பஸ்சையே நம்பியுள்ளனர். உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன.
ஆனால், கடைக்கோடி கிராமங்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
குறைந்த அளவில் செல்லும், டவுன்பஸ்களில் மக்கள் நின்று கொண்டும், தொங்கிக்கொண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால், விபத்துகள் நிகழும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.