நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேன் மோதி வாலிபர் பலி
கடலுார் மாவட்டம், கொல்லஞ்சாவடியை சேர்ந்தவர் ஜெயசீலன், 20. காங்கயத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று பள்ளிக்கு சொந்தமான டூவீலரில் மளிகை கடைக்கு சென்று விட்டு திரும்பும் போது, பின்னால் வந்த வேன் மோதியதில் பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி தற்கொலை
தாராபுரம், பூளவாடியை சேர்ந்தவர் வீரமுத்து, 54; தொழிலாளி. வீட்டில் துாக்கு மாட்டி இறந்தார். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.