/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு பெருமாள் கோவில்களில் கோலாகலம்
/
விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு பெருமாள் கோவில்களில் கோலாகலம்
விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு பெருமாள் கோவில்களில் கோலாகலம்
விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு பெருமாள் கோவில்களில் கோலாகலம்
ADDED : நவ 18, 2024 06:35 AM

திருப்பூர் ; விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் நேற்று, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும், நான்குமுறை விஷ்ணுபதி புண்ணியகாலம் நிகழ்கிறது. ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகள் மாறும் போது, சூரிய மாற்றத்தால் விஷ்ணுவின் தெய்வீக ஆற்றல் இணைந்து ஆன்மிக சக்தி பெருகுவதாக ஐ தீகம்.
அதன்படி, நேற்று முன்தினம், விஷ்ணுபதி புண்ணியகாலம் அனுசரிக்கப்பட்டது. காலை, 6:40 முதல், காலை, 10:30 மணி வரை, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கொடுவாய் விண்ணளந்த பெரியபெருமாள் கோவிலில், விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.