ADDED : ஏப் 16, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை நகரின் முக்கிய திருவிழாவாக மாரியம்மன் திருத்தேரோட்டம் ஆண்டுதோறும் உற்சாகம் குறையாமல், கொண்டாடப்படுகிறது. திருவிழா நோன்பு சாட்டியதும், நாள்தோறும் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அதன்படி முதல்நாளில் காமதேனு வாகனத்திலும், தொடர்ந்து ஒவ்வொரு நாளும் யானை, ரிஷபம், அன்னம், சிங்க வாகனத்தில் இரவு நேரத்தில், திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருத்தேரோட்டத்துக்கு பிறகு, மயில் வாகனத்திலும், பரிவேட்டைக்கு, குதிரை வாகனத்திலும், அம்மன் உலா செல்கிறார்.