/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., அணைகள் நீர்மட்டம் உயர்வு
/
பி.ஏ.பி., அணைகள் நீர்மட்டம் உயர்வு
ADDED : ஜூன் 12, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; கடந்த வாரம் பெய்த கனமழையால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
சோலையாறு அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான மேல்நீராறு அணை நிரம்பியது. அக்காமலை தடுப்பணையும் நிரம்பியது.
மழைப்பொழிவு குறைந்து சாரல்மழை மட்டுமே பெய்து வந்தது. இந்நிலையில், பருவமழை மீண்டும் பரவலாக பெய்யத்துவங்கி உள்ளது. இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் 95.63 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 564 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 890 கனஅடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.