sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாசனத்துக்கு மீண்டும் நீர் திறப்பு:  பி.ஏ.பி. விவசாயிகள் நிம்மதி 

/

பாசனத்துக்கு மீண்டும் நீர் திறப்பு:  பி.ஏ.பி. விவசாயிகள் நிம்மதி 

பாசனத்துக்கு மீண்டும் நீர் திறப்பு:  பி.ஏ.பி. விவசாயிகள் நிம்மதி 

பாசனத்துக்கு மீண்டும் நீர் திறப்பு:  பி.ஏ.பி. விவசாயிகள் நிம்மதி 


ADDED : செப் 01, 2025 07:26 PM

Google News

ADDED : செப் 01, 2025 07:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:

பிரதான கால்வாய் கசிவால், உடுமலை கால்வாயில் நிறுத்தப்பட்ட பாசன நீர் மீண்டும் நேற்று காலை திறக்கப்பட்டது.

பி.ஏ.பி.,நான்காம் மண்டல பாசனத்திற்குட்பட்ட, 94 ஆயிரத்து, 68 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த, ஜூலை, 27ல் நீர் திறக்கப்பட்டது.

135 நாட்களில், உரிய இடைவெளி விட்டு, மொத்தம், 9,500 மில்லியன் கனஅடி நீர் வழங்க திட்டமிடப்பட்டது. இரண்டாம் சுற்று பாசனம் தற்போது நடைபெற்று வருகிறது.

பிரதான கால்வாயில், 73வது கி.மீ., செஞ்சேரி புத்துார் பகுதியில், சில நாட்களுக்கு முன் கால்வாய் நீர் கசிவு அதிகரித்தது. பராமரிப்புக்காக கடந்த, 27ம் தேதி, பிரதான கால்வாயில் நீர் திறப்பு குறைக்கப்பட்டதோடு, உடுமலை கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில், நேற்று பிரதான கால்வாயில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. உடுமலை கால்வாயிலும் வழக்கம் போல், பாசன நீர் திறக்கப்பட்டது. இதனால், பாசன விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us