sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குடிநீர்... சாக்கடை... சாலை... எல்லாமே 'சங்கடம்'

/

குடிநீர்... சாக்கடை... சாலை... எல்லாமே 'சங்கடம்'

குடிநீர்... சாக்கடை... சாலை... எல்லாமே 'சங்கடம்'

குடிநீர்... சாக்கடை... சாலை... எல்லாமே 'சங்கடம்'


ADDED : ஏப் 25, 2025 11:42 PM

Google News

ADDED : ஏப் 25, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் செயல்படுத்தப்படும் மாநகராட்சியாக இருந்தபோதும், அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் ஏங்கும் மாநகராகத் தான் திருப்பூர் திகழ்கிறது. ஒவ்வொரு வார்டுகளிலுமே திரும்பிய இடங்களில் எல்லாம் குறைகளே காணப்படுகின்றன. இந்த வாரம், மாநகராட்சி 12வது வார்டு குறித்து பார்ப்போம்.

---

மாநகராட்சி 12வது வார்டு பகுதிகள்: 15 வேலம்பாளையம், சொர்ணபுரி அவென்யூ, அமர்ஜோதி கார்டன், அம்மையப்பன் நகர், அருமைக்காரர் தோட்டம், பி.டி.ஆர்., நகர், கரிய காளியம்மன் கோவில் வீதி, மூகாம்பிகை நகர், நேரு வீதி, ரிங் ரோடு, ஸ்ரீபதி நகர், வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகள்.

அரசு மருத்துவமனை

திறப்பு இழுத்தடிப்பு

வார்டில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்; நுாறு படுக்கை வசதிகளை கொண்ட அரசு மருத்துவமனை 15 வேலம்பாளையத்தில் 'ஜைக்கா' நிதி, ஐந்து கோடியில் கட்டப்பட்டது. பணி முடிந்து, ஒன்றரை ஆண்டு கடந்தும் திறக்கப்படவில்லை. வார்டு மக்கள் அரசு மருத்துவக் கல்லுாரி அல்லது அவிநாசி அரசு மருத்துவமனை செல்ல வேண்டியுள்ளது.

பல்லாங்குழி சாலைகள்

வாகனங்கள் தடுமாற்றம்

வார்டில் பிரதானமாக, அதிகளவில் வாகனங்கள் பயணிக்கும் சாலையாக, வேலம்பாளையம் - அம்மன் நகர் - சிறுபூலுவப்பட்டி ரிங் ரோடு உள்ளது. இந்த ரோட்டில், பள்ளக்காட்டுத்தோட்டம், அமர்ஜோதி கார்டன் 'ஆர்ச்' அருகே சாலை சேதமாகியுள்ளது. மழைநீர் வழிந்தோடி சாலையின் பாதி வரை மண் நிறைந்துள்ளது. கனரக வாகனங்கள் எதிரெதிரே வரும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி, சறுக்கி விழும் நிலை உள்ளது. கரிய காளியம்மன் கோவில், நடுநிலைப்பள்ளி முன்புறம் தார் பெயர்ந்து, சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.

மேல்நிலைப்பள்ளி எதிரில், அம்மையப்பர் நகர் முதல் டிேஸா ஸ்கூல் வீதி வரை ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. தினசரி ஒரு விபத்து நடந்து விடுகிறது. சமீபத்தில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி துவங்கப்பட்ட பகுதி, தரைப்பாலம் உள்ள இடங்களில் சாலை தோண்டப்பட்டு சரிவர மூடப்படவில்லை.

துரத்திக் கடிக்கும்

தெரு நாய்கள்

அவிநாசி ரோடு துவங்கி 15 வேலம்பாளையம், சோளிபாளையம் ரோடு, சொர்ணபுரி அவென்யூ, சிறுபூலுவப்பட்டிரி ரிங் ரோடு என வார்டில் எந்த வீதியில் திரும்பினாலும், நாய்கள் கூட்டமாக திரிகின்றன. வாகனங்களில் செல்வோரை துரத்திக் கடிக்கின்றன. நாய்களைப் பிடித்து செல்ல வேண்டும் என்கின்றனர் மக்கள்.

10 நாளுக்கு ஒருமுறைதான்

குடிநீர் வினியோகம்

குடிநீர் எட்டு முதல் பத்து நாளைக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும். சொர்ணபுரி அவென்யூ, சோளிபாளையம் ரோடு, 15 வேலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்கள் மேட்டுப்பாங்கான சாலையாக இருப்பதால், பத்து நாளைக்கு ஒருமுறை வழங்கப்படும் குடிநீரும் முழுமையாக வீடுகளுக்கு சென்று சேர்வதில்லை; தட்டுப்பாடு உள்ளது.

ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

சுருங்கிப்போன சாலை

அவிநாசி ரோடு - 15 வேலம்பாளையம் - சோளிபாளையம் சாலை, 15 வேலம்பாளையம் - அம்மன் நகர் - சிறுபூலுவப்பட்டி சாலை, கரியகாளியம்மன் கோவில் துவங்கி தண்ணீர் பந்தல் சிக்னல் சந்திப்பு என, 15 கி.மீ.,க்கு அதிகமான சாலை நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ளது. சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, சாலை சுருங்கி வருகிறது. விபத்து ஏற்படும் முன், மாற்றுத்தீர்வு காண வேண்டியது அவசர அவசியம். வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே மழைபெய்யும் போதெல்லாம், வீடுகளுக்கு மழைநீர் புகுந்து விடுகிறது. பத்தாண்டு பிரச்னைக்கு தீர்வு இல்லை. தொடர்ந்து, மனு அளித்து வருகிறேன்.

---

வேலம்பாளையம் கரிய காளியம்மன் கோவில் முன், சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அம்மையப்பர் நகர் டிஸ்ஸோ பள்ளி வீதி ரோட்டில் பெரிய பள்ளம் உள்ளது.

சொர்ணபுரி லே அவுட் சந்திப்பில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது.

சோளிபாளையம் ரோடு, விநாயகர் கோவில் அருகே எச்சரிக்கை அறிவிப்பு வைத்தும் குப்பை கொட்டப்பட்டுள்ளது.

சோளிபாளையம் ரோடு, பெட்ரோல் பங்க் அருகே குப்பை கொட்டப்பட்டுள்ளது.

சொர்ணபுரி என்கிளேவ் பகுதியில் குப்பை கொட்டாமலிருக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது.

வேலம்பாளையத்தில், திறப்பு விழா காணப்படாத அரசு மருத்துவமனை.

வேலம்பாளையம் நகர் நல மையம் அருகே மேல்நிலைத்தொட்டியில் ராட்சத தேன்கூடு.

வார்டில் சுற்றித் திரியும் நாய்கள்.

பள்ளக்காட்டு தோட்டம் பகுதியில், சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது.

அமர்ஜோதி கார்டன் ரோட்டில் தேங்கியுள்ள மணல்.

நெடுஞ்சாலைத்துறையினர்

செவிசாய்ப்பதில்லை திருப்பூர் மாநகராட்சி, 12வது வார்டு கவுன்சிலர் உமாமகேஸ்வரி, முதல் மண்டலத் தலைவராகவும் உள்ளார்; அவர் கூறியதாவது:வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்து விடுவதை தடுக்க, மழைநீர் வடிகால் 'சம்ப்' கட்டி, மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு அகற்ற, சேதமான சாலைகளை புதிதாக அமைத்து தர நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர்ந்து கடிதம் கொடுத்து வருகிறோம்; அவர்கள் செவிசாய்ப்பதே இல்லை. அமர்ஜோதி கார்டன், 25வது முக்கு ஸ்டாப், ஸ்ரீபதி நகர், வெங்கடேஸ்வரா நகர், முறையாக சாக்கடை கால்வாய் வசதி இல்லை. கால்வாய் கட்ட நிதி கேட்கப்பட்டுள்ளது. சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய நான்காவது குடிநீர் திட்டத்தில் அனைத்து பகுதிகளும் சேர்க்கப்பட்டு, நான்கு முதல் ஆறு நாட்களுக்கு குடிநீர் வழங்க முயற்சிக்கப்பட்டு வருகிறது. வார்டில் அனைத்து பகுதியிலும் கான்கிரீட் ரோடுகள் போட்டு, மண் ரோடுகளே இல்லாத நிலை எட்டப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண மாநகராட்சியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். வார்டில், 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பணிகளை முடித்துக் கொடுப்பதில், அதிகாரிகள் ஒத்துழைப்பு தருகின்றனர். முடிக்கப்பட வேண்டிய பணிகளுக்கு, நிதி ஒதுக்குமாறு கேட்டு தொடர்ந்து கடிதம் கொடுத்து வருகிறேன்.



'துாய்மை' சாத்தியமானது

குடியிருப்போருக்கு சபாஷ்வார்டில் சில இடங்களில் குப்பை அள்ளுவது தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு இருந்தாலும், சொர்ணபுரி என்கிளேவ், பி.டி.ஆர்., நகர், விஜயலட்சுமி அவென்யூ, சொர்ணபுரி ைஹலேண்ட் விரிவு உள்ளிட்ட பகுதிகளில் குப்பை தேங்காமல் இருக்க, அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், துாய்மை இயக்கம் துவங்கப்பட்டு குப்பையை பொதுவெளியில் கொட்டாமல் இருக்க, ஒவ்வொரு இடத்திலும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். வீட்டுக்கு குப்பைகளை வெளியே கொட்டாமல், மாநகராட்சி ஊழியர்களிடம் வழங்கி விடுவதால், குப்பை பிரச்னை இப்பகுதியில் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.அதே நேரம், சோளிபாளையம் ரோடு, விநாயகர் கோவில் பின்புறம் 'குப்பை கொட்ட வேண்டாம்' என அறிவிப்பு பலகை வைத்துள்ள இடத்தில், சிலர் குப்பை கொட்டி வைத்துள்ளனர். குப்பை தேங்குவதால், இவ்விடத்தில் புதிய குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



'துாய்மை' சாத்தியமானது

குடியிருப்போருக்கு சபாஷ்வார்டில் சில இடங்களில் குப்பை அள்ளுவது தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு இருந்தாலும், சொர்ணபுரி என்கிளேவ், பி.டி.ஆர்., நகர், விஜயலட்சுமி அவென்யூ, சொர்ணபுரி ைஹலேண்ட் விரிவு உள்ளிட்ட பகுதிகளில் குப்பை தேங்காமல் இருக்க, அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், துாய்மை இயக்கம் துவங்கப்பட்டு குப்பையை பொதுவெளியில் கொட்டாமல் இருக்க, ஒவ்வொரு இடத்திலும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். வீட்டுக்கு குப்பைகளை வெளியே கொட்டாமல், மாநகராட்சி ஊழியர்களிடம் வழங்கி விடுவதால், குப்பை பிரச்னை இப்பகுதியில் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.அதே நேரம், சோளிபாளையம் ரோடு, விநாயகர் கோவில் பின்புறம் 'குப்பை கொட்ட வேண்டாம்' என அறிவிப்பு பலகை வைத்துள்ள இடத்தில், சிலர் குப்பை கொட்டி வைத்துள்ளனர். குப்பை தேங்குவதால், இவ்விடத்தில் புதிய குப்பை தொட்டி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.'மெகா' தேன்கூடுஅகற்ற வேண்டும்ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. உயரமான இத்தொட்டியில் 'மெகா' சைஸ் தேன்கூடு உள்ளது. 100 மீட்டருக்குள் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், மேல்நிலைப்பள்ளி உள்ளிட்டவை உள்ளன. தேன்கூட்டை உடனடியாக அகற்ற வேண்டும்.








      Dinamalar
      Follow us