sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மக்களுக்காக தெருமுனைக்கு வந்துவிட்டோம்: பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

/

மக்களுக்காக தெருமுனைக்கு வந்துவிட்டோம்: பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

மக்களுக்காக தெருமுனைக்கு வந்துவிட்டோம்: பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

மக்களுக்காக தெருமுனைக்கு வந்துவிட்டோம்: பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு


ADDED : பிப் 17, 2024 01:28 AM

Google News

ADDED : பிப் 17, 2024 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:''திருப்பூர் மக்களுக்காக, இன்று தெருமுனையில் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறோம்,'' என, பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து, தொடர் தெருமுனை பிரசார கூட்டம், நேற்று மாலை, ராக்கியாபாளையத்தில் துவங்கியது.

ராக்கியாபாளையம் பிரிவை தொடர்ந்து, சி.டி.சி., ரவுண்டானா பகுதியில், தெற்கு மத்திய பகுதி சார்பில், தெருமுனைபிரசாரம் நடந்தது. ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், பகுதி செயலாளர் கண்ணப்பன், ஏ.டி.பி., மாவட்ட செயலாளர் கண்ணபிரான், நல்லுார் பகுதி செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள், இரவு, பகலாக வேலை செய்து கொண்டிருந்த நிலை மாறிவிட்டது. தற்போது, ஒரு 'ஷிப்ட்' வேலையே கிடைக்காமல் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.

தி.மு.க., ஆட்சியில், திருப்பூர் வளர்ச்சிக்கான எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையே, பெயர் மாற்றி செய்து கொண்டிருக்கின்றனர்.

மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய அ.தி.மு.க., இன்று தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலை வந்துள்ளது. மக்களுக்காக தெருமுனையில் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தெற்கு தொகுதியில் இன்று, தட்டான்தோட்டம், கே.வி.ஆர்., நகர் பகுதிகள்; திருப்பூர் வடக்கு தொகுதியில், எஸ்.ஏ.பி., தியேட்டர் காந்தி நகர் பகுதி, வேலம்பாளையம், திலகர் நகர் பகுதி, போயம்பாளையம், தொட்டிபாளையம் பிரிவு பகுதிகளில் இன்று, தெருமுனை பிரசாரம் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us