sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சுங்கம் இல்லாத சாலை வேண்டும்!

/

சுங்கம் இல்லாத சாலை வேண்டும்!

சுங்கம் இல்லாத சாலை வேண்டும்!

சுங்கம் இல்லாத சாலை வேண்டும்!


ADDED : ஜன 27, 2024 11:42 PM

Google News

ADDED : ஜன 27, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;அவிநாசி முதல், அவிநாசிபாளையம் வரை அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில், வேலம்பட்டி அருகே, சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில், குட்டை நிலத்தை ஆக்கிரமித்து, சுங்கச்சாவடி அமைந்துள்ளதாகவும், சுங்கம் இல்லாத ரோடாக அறிவிக்க வேண்டுமெனவும், திருப்பூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்ல முத்து, சுங்கச்சாவடி எதிர்ப்பு குழு நிர்வாகி கிருஷ்ணசாமி உள்ளிட்டோர், கோவை வந்த மத்திய இணை அமைச்சர் முருகனை நேற்று சந்தித்து, அவிநாசிபாளையம் ரோட்டை, சுங்கம் இல்லாத ரோடாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

அவரிடம் அளித்த மனுவில், 'என்.எச்.,381 ரோடு, விதிகளை பின்பற்றாமலும், அடிப்படை வசதி செய்யாமலும் அமைத்துள்ளனர். வேலம்பட்டி நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து, சுங்கச்சாவடி அமைத்துள்ளனர்; அதனை அகற்ற வேண்டும். இதனை, சுங்கம் இல்லாத ரோடாக அறிவிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us