sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொரவலூர் ஊராட்சியில் மீண்டும் வாரச்சந்தை

/

தொரவலூர் ஊராட்சியில் மீண்டும் வாரச்சந்தை

தொரவலூர் ஊராட்சியில் மீண்டும் வாரச்சந்தை

தொரவலூர் ஊராட்சியில் மீண்டும் வாரச்சந்தை


ADDED : ஜன 15, 2024 01:24 AM

Google News

ADDED : ஜன 15, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்:திருப்பூர் ஒன்றியம், தொரவலுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வார சந்தை செயல்பட்டு வந்தது.

பல்வேறு பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்து, வந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வாரச்சந்தை மூடப்பட்டது. தற்போது அதே இடத்தில் மீண்டும் வாரச்சந்தையை திறக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

வாரச்சந்தைக்கு தேவையான கடை மேடை, மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டது. நேற்று எம்.எல்.ஏ.,விஜயகுமார் திறந்து வைத்தார்.

ஊராட்சி தலைவர் தேவகி, துணை தலைவர் மவுலீஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன், ஊராட்சி உறுப்பினர்கள் கார்த்தி, கணேசன், சித்ரா, கிராமிய மக்கள் இயக்க நிர்வாகிகள் சம்பத்குமார், செல்வம், சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதல் நாளான நேற்று 40க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்று பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us