sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தருமை ஆதினத்துக்கு வரவேற்பு

/

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தருமை ஆதினத்துக்கு வரவேற்பு

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தருமை ஆதினத்துக்கு வரவேற்பு

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தருமை ஆதினத்துக்கு வரவேற்பு


ADDED : ஜூன் 20, 2025 02:54 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 02:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மஹா ருத்ர ஹோம பூஜையில் பங்கேற்க வந்த தருமை ஆதினத்துக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

உலக நலன் மற்றும் அமைதி வேண்டி கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையாக விளங்கும், ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மஹா ருத்ர ஹோமம் நடந்து வருகிறது. இதில், பங்கேற்க நேற்று மாலை கோவிலுக்கு வந்த திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 27வது குரு மஹா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு, அவிநாசி கோவில் நிர்வாகத்தினர் மற்றம் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

தொடர்ந்து அவர் மஹா ருத்ர பூஜையில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில், பெங்களூரூ வேத ஆகம சமஸ்க்ருத மஹா பாடசாலை முதல்வர் அவிநாசி சுந்தரமூர்த்தி சிவம், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், செயல் அலுவலர் சபரீஷ்குமார், அறங்காவலர் பொன்னுசாமி, விஜயகுமார் மற்றும் பாடசாலை மாணவர்கள், சிவனடியார்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us