ADDED : ஜன 31, 2026 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: மனித நேய வார விழா நிறைவு நிகழ்ச்சி, ரோட்டரி மஹாலில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார்.
பயனாளிகள் 18 பேருக்கு, மொத்தம், 1.21 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தாட்கோ சார்பில், துாய்மை பணியாளர் 4 பேருக்கு, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், இரட்டை குழந்தைகளுக்கு மகப்பேறு உதவித்தொகை, திருமண உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
ஆதிதிராவிடர் நல அலுவலகம் வாயிலாக, 14 பேருக்கு, தையல் மெஷின்கள் வழங்கப்பட்டன. ஓவியம், கவிதை, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் பிரவீன் கவுதம், ஆதிதிராவிடர் நல அலுவலர் சதீஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

