sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமெரிக்காவின் நெருக்கடிகளுக்கு அஞ்சிடோம்; விவசாய சங்கத்தினர், தொழில்துறையினர் கணீர்

/

அமெரிக்காவின் நெருக்கடிகளுக்கு அஞ்சிடோம்; விவசாய சங்கத்தினர், தொழில்துறையினர் கணீர்

அமெரிக்காவின் நெருக்கடிகளுக்கு அஞ்சிடோம்; விவசாய சங்கத்தினர், தொழில்துறையினர் கணீர்

அமெரிக்காவின் நெருக்கடிகளுக்கு அஞ்சிடோம்; விவசாய சங்கத்தினர், தொழில்துறையினர் கணீர்


UPDATED : ஆக 10, 2025 08:27 AM

ADDED : ஆக 09, 2025 11:46 PM

Google News

UPDATED : ஆக 10, 2025 08:27 AM ADDED : ஆக 09, 2025 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது, 50 சதவீத வரி விதித்துள்ளார். ''இந்திய விவசாயிகள், மீனவர்கள், பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாத்தே தீருவோம். அதற்காக எத்தகைய விலை கொடுக்க வேண்டி இருந்தாலும், அதற்கு இந்தியா தயாராக இருக்கிறது'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மையை காப்போம் என்றும், விவசாயிகள், தொழில்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

புதிய சந்தை வேண்டும்

---

வெற்றி (செயல் தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்): தமிழகத்தில் இருந்து பருத்தி, மிளகு, மஞ்சள், தேயிலை, மசாலா உள்ளிட்ட பயிர்கள் அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்காவின் இந்த மிரட்டல் தொடராமல் இருக்க, அந்நாட்டு சந்தைக்கு மாற்றாக, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் புதிய ஏற்றுமதி சந்தைகளை உருவாக்க வேண்டும். அமெரிக்காவின் வரி விதிப்பால், இதர தொழில்கள் பாதிக்கப்படாமல் இருக்க, பேச்சுவார்த்தையில் சமூகத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

ஒருபோதும் வீழோம்

--------------------------

செல்லமுத்து (மாநில தலைவர், உழைப்பாளர் கட்சி):

ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து, உலகின், 192 நாடுகளும் வரவேற்றுள்ளன. உலக நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு அளிக்கும்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப், கோமாளி வேலையை செய்து வருகிறார். ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியாவுடன் சேரும்போது, அமெரிக்கா அடங்கி ஒடுங்கி வேண்டிய சூழல் உருவாகும். இந்த வரி விதிப்பு என்பது, தற்காலிகமாக சில பாதிப்புகளை ஏற்படுத்துமே தவிர, ராணுவ வலிமை கொண்ட இந்தியாவின் பொருளாதாரம் ஒரு போதும் வீழ்ச்சி பெறாது. மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு விவசாயிகளின் ஆதரவு எப்போதும் முழுமையாக இருக்கும்.

அச்சம் எதற்கு?

-----

ஈஸ்வரன் (நொய்யல் ஆறு நன்னீருக்கான இயக்க ஒருங்கிணைப்பாளர்):

வரிவிதிப்பு மூலம் டிரம்ப், இந்தியாவை மிரட்டுவது ஏற்புடையதல்ல. எந்த சூழலிலும் எனது நிலைப்பாட்டில் இருந்து மாற மாட்டேன். இந்திய விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது எனது கடமை என, துணிச்சலுடன் பிரதமர் கூறியது பெருமிதமாக உள்ளது. தேவைக்கு அதிகமாகவே, உணவு உற்பத்தி செய்து தர விவசாயிகள் தயாராக உள்ள போது, அன்னிய நாட்டைக் கொண்டு நாம் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் உணவு பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய விவசாயிகள், பொதுமக்கள் நம்பிக்கையில், பிரதமர் எடுத்துள்ள துணிச்சலான முடிவை வரவேற்கிறோம்.

எல்லா வளமும் உள்ளது

---------------------

திருஞானசம்பந்தம் (ஒருங்கிணைப்பாளர், நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்):

இந்தியாவில், உழைப்பு என்ற மிகப்பெரும் ஆயுதம் உள்ளதால், யாரும் அச்சப்படத் தேவையில்லை. எல்லா வளமும் நமது நாட்டில் உள்ள நிலையில், நாம், யாரை சார்ந்து இருக்க வேண்டும்? நதிநீர் இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம், யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.

உற்பத்தி பெருகட்டும்

-------------------------

சுரேஷ் (மாநிலத் தலைவர், ஏர்முனை இளைஞர் அணி):

மத்திய அரசு, உள்ளூர் விவசாயிகளின் உற்பத்தி போகவே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். வெளிநாடுகளுக்கு அதிக சலுகைகள் கொடுத்து இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும். இதன் வாயிலாக, விவசாயிகள் உற்பத்தியை பெருக்கி, மற்ற நாடுகளை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

'இறையாண்மை பாதிக்க விட மாட்டோம்' வாய்ப்புகள் அதிகம் --- சுவாதி கண்ணன் (செயலாளர், கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு): இந்தியாவில், விவசாயத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நிலங்களும், உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. எனவே , அமெரிக்கா மட்டுமின்றி எந்த நாட்டையும் எதிர்பார்க்காமல் நம்மால் உற்பத்தியை பெருக்க முடியும். ஆனால் இங்கு பிரச்னையே மனித உழைப்பை சரியாக பயன்படுத்தாமல் வீணடிப்பது தான் கவலை அளிப்பதாக உள்ளது. மனித உழைப்பை சரியாக பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவதன் மூலம், அமெரிக்கா உள்ளிட்ட எந்த ஒரு நாடுகளின் அச்சுறுத்தலுக்கும் அச்சப்படத் தேவையில்லை. பிற நாடுகளுடன் ஏற்றுமதி வேலுசாமி (தலைவர், திருப்பூர் கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்கம்): அமெரிக்காவின் வரி விதிப்பு, இந்திய ஜவுளி துறையை, 50 சதவீதம் பாதிக்கும். இதை ஈடு செய்யும் வகையில், பிற நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக, அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தலாம்.இந்தியாவின் வேளாண் பொருட்களை தவிர்த்து விட்டு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. இந்தியா, 75 சதவீத விவசாய தொழிலுடன் கட்டுக்கோப்பாக உள்ளது. எனவே, விவசாயத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. அமெரிக்காவை தவிர்த்து, பிற நாடுகளுடனான ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும். உறுதுணையாக இருப்போம் ----------------------- சக்திவேல் (ஒருங்கிணைப்பாளர், ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம்): விவசாய விளைபொருட்களை மையப்படுத்தி, அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது தவறானது. நிச்சயமாக அமெரிக்கா இதிலிருந்து பின்வாங்கும் இந்திய இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் ஏற்க முடியாது. இதற்காக, பிரதமர் மோடி எடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம்.








      Dinamalar
      Follow us