sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் எப்போது?

/

இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் எப்போது?

இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் எப்போது?

இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் எப்போது?


ADDED : நவ 09, 2025 04:53 AM

Google News

ADDED : நவ 09, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்,:திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், காங்கேயம், ஊதியூரில் தெருநாய் கடித்து பலியாகும் ஆடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊதியூரில் நாய்கள் கடித்து குதறியதில், 3 நாளில், 22 ஆடுகள் பலியாகி விட்டன. 'இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து, அப்பகுதி மக்கள் சாலை மறியல் நடத்தினர்.

இதுதொடர்பாக காங்கேயம் தாசில்தார் அளித்துள்ள விளக்கம்: கடந்த, 2024 அக்., 24 முதல், 2025 மார்ச் 21 வரை நாய்களால் கடிபட்டு இறந்த ஆடுகளுக்கு அரசின் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 2024 அக்., 24க்கு முன் இறந்த கால்நடைகளுக்கும், 2025 மார்ச் 22க்கு பின் இறந்த கால்நடைகளுக்கும் இழப்பீடு வழங்க விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இதனால் வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஊரக உள்ளாட்சித்துறை மற்றும் காவல் துறையினர் பேச்சு நடத்தியதில், கலெக்டர் வாயிலாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, இழப்பீட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us