sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாரச்சந்தை விரிவாக்கம் எப்போது? மடத்துக்குளத்தில் எதிர்பார்ப்பு

/

வாரச்சந்தை விரிவாக்கம் எப்போது? மடத்துக்குளத்தில் எதிர்பார்ப்பு

வாரச்சந்தை விரிவாக்கம் எப்போது? மடத்துக்குளத்தில் எதிர்பார்ப்பு

வாரச்சந்தை விரிவாக்கம் எப்போது? மடத்துக்குளத்தில் எதிர்பார்ப்பு


ADDED : ஜூன் 24, 2025 10:16 PM

Google News

ADDED : ஜூன் 24, 2025 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; வாரச்சந்தைக்கென நிரந்தர கட்டடம் கட்டி, விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மடத்துக்குளம் பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மடத்துக்குளம் பகுதியில், விவசாயம் பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், சுற்றுப்பகுதி மக்கள் காய்கறி வாங்கவும், வாரச்சந்தை 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகம் பின்புறம் துவங்கப்பட்ட சந்தையில், இதுவரை கட்டமைப்பு வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.

தற்போது வாரந்தோறும் சனிக்கிழமைகளில், தற்காலிக பந்தல் அமைத்து, காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். போதிய இடவசதி இல்லாததால், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, ஆபத்தான முறையில், வரிசையாக அமர்ந்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, கடைகள் அமைப்பதுடன், அங்கு வரும் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி கொள்வதால், அப்பகுதியில், நெருக்கடியும் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது.

'மக்கள் தொகை அதிகமுள்ள, விவசாயம் பிரதானமாக உள்ள மடத்துக்குளத்தில், செயல்படும் வாரச்சந்தையை விரிவுபடுத்த வேண்டும். நிரந்தர கடைகள் கட்டி, நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,' என நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன், சந்தையை இடம் மாற்றி, விரிவுபடுத்துவது குறித்த கருத்துரு அரசுக்கு அனுப்பினர். அதன்பின்னர், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது போக்குவரத்துக்கு இடையூறாகவும், நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு போதிய பாதுகாப்பில்லாத முறையிலும் வாரச்சந்தை இயங்கி வருகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம், இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us