ADDED : ஜன 28, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் சுரேஷ், 48. இவரது மனைவி அன்னலட்சுமி, 44. நேற்று காலை தம்பதி, புதிய பஸ் ஸ்டாண்டை நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கோபியில் இருந்து வந்த அரசு பஸ், டூவீலர் மீது உரசியது. அதில், டூவீலருடன் கீழே விழும் போது, பின்னால் அமர்ந்திருந்த மனைவி அன்னலட்சுமி மீது பஸ் மோதியது. படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.