/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காட்டுப்பன்றிகள் நடமாட்டம்; கண்காணிப்புக்குழு அமைப்பு
/
காட்டுப்பன்றிகள் நடமாட்டம்; கண்காணிப்புக்குழு அமைப்பு
காட்டுப்பன்றிகள் நடமாட்டம்; கண்காணிப்புக்குழு அமைப்பு
காட்டுப்பன்றிகள் நடமாட்டம்; கண்காணிப்புக்குழு அமைப்பு
ADDED : ஏப் 25, 2025 08:01 AM
திருப்பூர்; விளை நிலங்களில் புகுந்து, பயிர்களை துவம்சம் செய்யும் காட்டுப்பன்றிகளை சுடும் தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து, காட்டுப்பன்றி நடமாட்டம் அதிகமுள்ள கிராமங்களில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
'விளை நிலங்களில் புகும் காட்டுப்பன்றிகள், பயிர்களை துவம்சம் செய்து விடுகின்றன,' என்பது, விவசாயிகளின் தொடர் குற்றச்சாட்டு. அதன் தொடர்ச்சியாக, பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை சுட, தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. விவசாய நிலங்களில் மக்காச்சோளம், கரும்பு, குச்சிக்கிழங்கு, சோளத்தட்டு உள்ளிட்டவற்றை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால், கால்நடைகளுக்கான தீவனப்பற்றாக்குறை ஏற்படும் சூழலும் நிலவியது. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம் பகுதிகளில் தான் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை விரைவில் துவக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காட்டுப்பன்றிகளை சுடுவது தொடர்பாக, மாநில வன பணிக்கான மத்திய உயர் பயிற்சியகத்தில், வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது.