sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமராவதி அணையில் கூடுதல் நீர் திறக்கப்படுமா?

/

அமராவதி அணையில் கூடுதல் நீர் திறக்கப்படுமா?

அமராவதி அணையில் கூடுதல் நீர் திறக்கப்படுமா?

அமராவதி அணையில் கூடுதல் நீர் திறக்கப்படுமா?


ADDED : ஜூன் 02, 2025 06:19 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : மேற்கு தொடர்ச்சி மலை நீர் பிடிப்பு பகுதிகள் அமராவதி அணைக்கு நீர் ஆதாரமாக உள்ளன. முன்னதாகவே துவங்கியுள்ள தென் மேற்கு பருவ மழை மூலம், அதிக மழை பெறப்பட்டுள்ளது.

அணை அதன் கொள்ளளவான 90 அடியில் தற்போது 80 அடி நீர் நிரம்பி நிற்கிறது. அணை நிரம்பும் நிலையில் குறிப்பிட்ட அளவு நீர் திறந்து விடப்படும்.

அணையில் நீர் திறக்கப்பட்டு மூன்று மாதங்களாகிறது. அணையிலிருந்து வெளியேறும் நீர் அமராவதி ஆற்றில் பாசன மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் பயன்தரும். இருப்பினும், தாராபுரம் வரை மட்டுமே சென்றடையும் வகையில் இதுவரை நீர் திறக்கப்பட்டு வருகிறது.

''தாராபுரத்தை கடந்து, மயில்ரங்கம், சின்ன தாராபுரம், அரவக்குறிச்சி வழியாக கரூர் வரை இந்த ஆறு பாய்ந்து, வழியோர கிராமங்களுக்கு பயன் தர வேண்டும்.

இரு கரைகளிலும் உள்ள தென்னை பயிரிட்டுள்ள விவசாய நிலங்களுக்கும், வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இது உள்ளது. தற்போது அணை முற்றிலும் நிரம்பியுள்ள நிலையில் அதிகளவில் நீர் திறக்கப்பட்டு, மாவட்ட எல்லை மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளுக்கும் பயன் தரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us