/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர்மின் விளக்கு அமைக்கப்படுமா?
/
உயர்மின் விளக்கு அமைக்கப்படுமா?
ADDED : செப் 22, 2025 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும் புறநகர் பஸ்கள், கிழக்கு பகுதிக்கு செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் அங்கு போதிய மின்விளக்குகள் இல்லாதாதல், வெளிச்சம் இல்லாமல் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால், பஸ்சுக்கு காத்திருப்போருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு உயர்மின்விளக்கு அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.