/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர் மின்விளக்கு அமைக்கப்படுமா?
/
உயர் மின்விளக்கு அமைக்கப்படுமா?
ADDED : நவ 11, 2025 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், உயர்மின் விளக்கு இல்லாததால், இருள்சூழ்ந்து காணப் படுகிறது.
உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கியும், கிழக்கு பகுதிக்கு செல்லும் புறநகர் மற்றும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு பஸ்சுக்காக ஏராளமான பயணியர் காத்திருக்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, பயணியர் நலன் கருதி உயர் மின்விளக்கு நகராட்சி அதிகாரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

