ADDED : பிப் 10, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;திருப்பூர் வடக்கு ஒன்றிய பா.ஜ., பொதுச் செயலாளர் குமார், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அளித்த மனு:
திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுார் ஊராட்சி, ஈஸ்வரன் கோவில் வீதியில் சாக்கடை கால்வாய் உடைப்பு ஏற்பட்டுபெரிய அளவில் குழி ஏற்பட்டுள்ளது. குழியில் விழுந்து பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, இதனை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளோம். அடுத்த மாதம் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர்திருவிழா நடக்க உள்ளது.
திருவிழாவின் போது, ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக தேர் உலா வரும் அப்போது இந்த குழியால் பக்தர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் உடைந்து போன கான்கிரிட் கால்வாயை சீரமைக்க வேண்டும்.