sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மீண்டும் நடத்தப்படுமா?

/

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மீண்டும் நடத்தப்படுமா?

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மீண்டும் நடத்தப்படுமா?

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மீண்டும் நடத்தப்படுமா?


ADDED : ஜூலை 05, 2025 11:38 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறு வயதிலேயே குழந்தைகள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களது சிந்தனையை வளர்த்தெடுப்பது, காலத்தின் அவசியம். இந்த உணர்வு இன்றல்ல, நேற்றல்ல; பல ஆண்டுகளுக்கு முன்பே, மாணவர்கள் மத்தியில் விதைக்கப்பட்ட ஒன்றுதான்.பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு அறிவியல் அறிவை புகுத்தி, அவர்களை அறிவியல் கண்டுபிடிப்பில் ஈடுபடச் செய்யும் நோக்கில், மத்திய அரசின் சார்பில், ஆண்டுதோறும் 'தேசிய அறிவியல் காங்கிரஸ்' எனப்படும் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தில் இந்த மாநாடு நடத்தப்படுவது வழக்கம்.

இதையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவில் துவங்கி, மாவட்ட, மாநில அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு, சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் தேசிய மாநாட்டில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படுவர். நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவியர் பங்கேற்பர். சிறந்த முறையில் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி, அதுதொடர்பாக விளக்கமளிக்கும் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

மாநாடு மற்றும் அறிவியல் போட்டியை, மத்திய அரசின் தொழில் நுட்பத்துறை, தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்ற குழுமம், அந்தந்த மாநிலங்களில் செயல்படும் அறிவியல் தொழில் நுட்பக்கழகம் மற்றும் தன்னார்வல இயக்கங்கள் ஒருங்கிணைத்தன.

விஞ்ஞானிகளுக்கும் வாய்ப்பு

அதேபோல், நாடு முழுக்க உள்ள விஞ்ஞானிகளை ஒருங்கிணைத்து, அவர்களது வாயிலாக அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் ஆலோசனைகளை பெறும் நோக்கில், ஆண்டுதோறும் தேசிய விஞ்ஞானிகள் மாநாடும் நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில், இந்த இரு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்றுள்ளது. அந்தந்த காலக்கட்டத்திற்கேற்ப அறிவியல் முன்னேற்றம் சார்ந்து தலைப்புகள் வழங்கப்படும்; கருப்பொருளும் அறிவிக்கப்படும். ஆனால், இந்த இரு நிகழ்ச்சிகளும் கடந்த இரு ஆண்டுகளாக நடத்தப்படுவதில்லை. இது, அறிவியல் மீது ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மாநில அளவில் மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் ராமமூர்த்தி கூறியதாவது:அறிவியல் படைப்பு மற்றும் அறிவாற்றலில் சிறந்த மாணவ, மாணவியரை கண்டறியும் வகையில், கடந்த, 31 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த தேசிய அறிவியல் காங்கிரஸ், மாணவ, மாணவியருக்கு மிகுந்த பயன் தருவதாக இருந்தது. குக்கிராமங்களை சேர்ந்த திறமை வாய்ந்த மாணவ, மாணவியர் கூட, இதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. நிறுத்தப்பட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதே, அறிவியல் சார்ந்த அமைப்புகளின் எதிர்பார்ப்பு.இதுதொடர்பான கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அதற்கேற்ப, மத்திய அரசும், இந்தாண்டு, தேசிய அளவிலான மாநாடு நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது; இருப்பினும், அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. அந்தந்த வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில், அறிவியல் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.அதே போன்று, சுதந்திரத்துக்கு முன், 105 ஆண்டு பாரம்பரியத்துடன் தேசிய அளவிலான விஞ்ஞானிகள் மாநாடும் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. எனவே, தமிழக அரசுடன் இணைந்து, நாடு முழுக்க உள்ள சிறந்த, 100 விஞ்ஞானிகள் பங்கேற்க வகை செய்யும் நோக்கில், மாநில அளவில் விஞ்ஞானிகள் மாநாடு நடத்துவதற்குரிய ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us