/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதல் இருக்கை அமைக்கப்படுமா?
/
கூடுதல் இருக்கை அமைக்கப்படுமா?
ADDED : நவ 22, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பயணியருக்கு கூடுதல் இருக்கை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், பழநி நோக்கி செல்லும் புறநகர் பஸ்களும், கிழக்கு பகுதிக்கு செல்லும் டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இங்கு பயணியர் அமர போதிய இருக்கை வசதிகள் இல்லை. இதனால், பஸ்சுக்காக அங்கு வரும் பயணியர், நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, அங்கு நகராட்சி அதிகாரிகள் கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும்.

