sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூரில் போலி கிளினிக் நடத்திய பெண் கைது 

/

திருப்பூரில் போலி கிளினிக் நடத்திய பெண் கைது 

திருப்பூரில் போலி கிளினிக் நடத்திய பெண் கைது 

திருப்பூரில் போலி கிளினிக் நடத்திய பெண் கைது 


ADDED : மார் 29, 2025 07:22 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் அருகே பெருமாநல்லுாரில் செயல்பட்டு வந்த போலி கிளினிக்குக்கு மருத்துவத்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். கிளினிக் நடத்தி வந்த, பெண்ணை பெருமாநல்லுார் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி, தட்டாங்குட்டையில் எஸ்.எம்., கிளினிக் என்ற பெயரில், பொது நல மருந்தகம் செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனை குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜூக்கு வந்த புகாரை தொடர்ந்து, மாவட்ட மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குனர் மீரா, மருத்துவ பணிகள் கண்காணிப்பாளர் ஹரிகோபாலகிருஷ்ணன், அவிநாசி வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி தலைமையில் மருத்துவக் குழுவினர், இந்த மருத்துவமனையில் நேற்று ஆய்வு நடத்தினர்.

இதில், நிம்மி, 45 என்ற பெண், தன்னை டாக்டர் என கூறிக்கொண்டு, எட்டு மாதங்களாக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அப்பெண்ணிடம் மருத்துவக்குழுவினர், போலீசார் விசாரணை நடத்தினர்.

கிளினிக் நடத்த முறையான ஒப்புதல் பெறவில்லை. மருத்துவ படிப்புக்கான கல்விச்சான்றிதழ் எதுவும் அப்பெண்ணிடம் இல்லை. இதனால், பெருமாநல்லுார் போலீசார் நிம்மியை கைது செய்தனர். அதனை தொடர்ந்து, கிளினிக் மற்றும் மருந்தகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குனர் மீரா கூறுகையில், ''தன்னை டாக்டர் என கூறிக்கொண்ட நிம்மி, மருந்தகத்தையும் நடத்தி வந்துள்ளார். இரு படுக்கை அமைத்து, நோயாளிகள் தங்கி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். போலி மருத்துவமனையில் இருந்து உபகரணம், ஊசி, மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us