sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கரும்பு சாகுபடிக்கு பணிகள் தீவிரம்

/

கரும்பு சாகுபடிக்கு பணிகள் தீவிரம்

கரும்பு சாகுபடிக்கு பணிகள் தீவிரம்

கரும்பு சாகுபடிக்கு பணிகள் தீவிரம்


ADDED : செப் 18, 2025 09:52 PM

Google News

ADDED : செப் 18, 2025 09:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; கரும்பு சாகுபடிக்காக விளைநிலங்களை தயார்படுத்தும் பணிகளை ஏழு குள பாசன திட்ட விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உடுமலை ஏழு குள பாசன திட்ட பகுதிகளில், முன்பு கரும்பு சாகுபடி பிரதானமாக இருந்தது. பல்வேறு காரணங்களால், அப்பகுதியில் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து விட்டது.

தற்போது, போடிபட்டி, பள்ளபாளையம், வடபூதனம் உள்ளிட்ட கிராமங்களில், வெல்லம் உற்பத்திக்காக கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். ஏழு குள பாசன திட்டத்தில், குளங்களின் வாயிலாக நேரடி பாசனம் பெறும் விளைநிலங்களில், நடப்பு சீசனில் கரும்பு நடவுக்காக பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த சீசனில், கரும்பு மற்றும் வெல்லத்துக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

விவசாயிகள் கூறுகையில், 'கரும்பு சாகுபடியில் நஷ்டத்தை தவிர்க்க, புதிய தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்துறை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிக பிழிதிறன் மற்றும் உற்பத்தி அதிகரிக்கும் வகையில், தொழில்நுட்பட ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே ஏழு குள பாசன பகுதியில், கரும்பு சாகுபடி முற்றிலுமாக காணாமல் போவதை தவிர்க்க முடியும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us