/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமியிடம் அத்துமீறல் தொழிலாளிக்கு '20 ஆண்டு'
/
சிறுமியிடம் அத்துமீறல் தொழிலாளிக்கு '20 ஆண்டு'
ADDED : செப் 04, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; பலவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரித்விராஜ், 35. பனியன் நிறுவன தொழிலாளி. கடந்த, 2023ல், 10 வயது பள்ளி மாணவி மீது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பிரித்விராஜை கைது செய்தனர்.வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட் நீதிபதி கோகிலா நேற்று பிரித்விராஜூக்கு, 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.