/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சனி மகா பிரதோஷம் சிவாலயங்களில் வழிபாடு
/
சனி மகா பிரதோஷம் சிவாலயங்களில் வழிபாடு
ADDED : ஜன 12, 2025 02:16 AM

திருப்பூர்: நேற்று வளர்பிறை சனி மகா பிரதோஷம் முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இவற்றில் திரளானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் முன்னதாக நந்திேகஸ்வரருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில், ஏ.டி.பி., நகர் காசி விஸ்வநாதர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி, அலகுமலை ஆதி கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷம் முன்னிட்டு நந்திகேஸ்வரர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. இவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.