sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆல்கொண்டமால் கோவிலில் ரேக்ளா காளைகளுக்கு பூஜை

/

ஆல்கொண்டமால் கோவிலில் ரேக்ளா காளைகளுக்கு பூஜை

ஆல்கொண்டமால் கோவிலில் ரேக்ளா காளைகளுக்கு பூஜை

ஆல்கொண்டமால் கோவிலில் ரேக்ளா காளைகளுக்கு பூஜை


ADDED : ஜன 02, 2025 12:35 AM

Google News

ADDED : ஜன 02, 2025 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ;உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கால்நடை வளம் பெருகவும், அவற்றுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், மக்கள், இக்கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.

கால்நடைகளுக்கென பிரத்யேக கோவில் எனப்படும் இக்கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பொங்கலையொட்டி, மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழா மிக பிரசித்தி பெற்றதாகும்.

மார்கழி மாதத்தையொட்டி சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நேற்று நடந்தது. இப்பூஜையில், உடுமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து, ரேக்ளா வண்டிகளில் விவசாயிகள் வந்தனர்.பின்னர், ரேக்ளா காளைகளுக்கு, கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்தினர்.

விவசாயிகள் கூறுகையில், 'ரேக்ளா வண்டிகளில், காளைகளை பூட்டி பழக்கி வருகிறோம். பொங்கல் பண்டிகையின் போது, ரேக்ளா வண்டிகளில், கோவிலுக்கு செல்வதை பாரம்பரியமாக பின்பற்றி வருகிறோம். தற்போது ரேக்ளா வண்டி ஓட்ட பழக்கி வரும் காளைகளை அழைத்து வந்து, அவை நலத்துடன் வாழ, ஆல்கொண்டமால் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்துகிறோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us