/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலை உத்தரவு பெட்டியில் மஞ்சள் பிள்ளையார் வழிபாடு
/
சிவன்மலை உத்தரவு பெட்டியில் மஞ்சள் பிள்ளையார் வழிபாடு
சிவன்மலை உத்தரவு பெட்டியில் மஞ்சள் பிள்ளையார் வழிபாடு
சிவன்மலை உத்தரவு பெட்டியில் மஞ்சள் பிள்ளையார் வழிபாடு
ADDED : மார் 12, 2026 04:42 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், சிவன்மலை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவர் உத்தரவு பெட்டி வழிபாடு நடைமுறையில் உள்ளது.
பக்தர்கள் கனவில் தோன்றி, முருகப்பெருமான் உணர்த்தும் பொருட்களை, உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்வது வழ க்கம். கடந்த அக். மாதம் முதல் கடல்நீர் வைத்து பூஜை நடந்து வந்தது.
கோவில் ஊழியர் ராம்குமார் என்பவர் கனவில் உணர்த்தியபடி, நேற்று மஞ்சள் பிள்ளையார், அருகம்புல், வெற்றிலை பாக்கு மற்றும் எலுமிச்சை வைத்து பூஜை நடந்தது.
கூனம்பட்டி திருமடம் குருகுல வேதாகம பாடசாலை முதல்வர் ஸ்ரீநடராஜ சுவாமி கூறுகையில்,''உலக அளவில் குழப்பமான சூழல் நிலவுகிறது. குடும்பங்களிலும் மனவருத்தங்கள் இருந்தது. வினை தீர்க்கும் விநாயகர், மஞ்சள் பிள்ளையாராக எழுந்தருளியுள்ளதால், மக்களுக்கு அருட்கடாட்ஷம் வழங்குவார். மங்களம் பெருகும், மழையால் விவசாயம் செழிக்கும். வெற்றிலை பாக்கு, எலுமிச்சை தாம்பூலம் மங்களத்தின் அடையாளம். எனவே, சுபமங்கள நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும்'' என்றார்.

