sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தரிசு நிலத்திலும் விளைச்சல் பெருகும்; ஒருங்கிணைந்த திட்டத்தில் இணைய அழைப்பு

/

தரிசு நிலத்திலும் விளைச்சல் பெருகும்; ஒருங்கிணைந்த திட்டத்தில் இணைய அழைப்பு

தரிசு நிலத்திலும் விளைச்சல் பெருகும்; ஒருங்கிணைந்த திட்டத்தில் இணைய அழைப்பு

தரிசு நிலத்திலும் விளைச்சல் பெருகும்; ஒருங்கிணைந்த திட்டத்தில் இணைய அழைப்பு


ADDED : ஜூலை 25, 2025 11:38 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'வீணாக கிடக்கும் தரிசு நிலங்களிலும் விளைச்சல் பெறும் வகையிலான திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெற வேண்டும்' என, வேளாண்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

வேளாண் துறையினர் கூறியதாவது:கிராம ஊராட்சிகளும், ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சி பெற்று, தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றவும், தரிசு நிலங்களை சாகுபடிக்கு ஏற்றதாக கொண்டு வரவும், உழவர் நலத்துறை மற்றும் உழவர் நலன் சார்ந்த பிற துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், கடந்த, 2021 - 2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில், இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலம் வைத்துள்ள, 6 அல்லது அதற்கும் மேற்பட்ட விவசாயிகள் குழுவாக இணைந்து, குறைந்தபட்சம், 10 ஏக்கர் தரிசு நிலத்தை தொகுப்பாக ஏற்படுத்தி, அத்தொகுப்பில் நீராதாரங்கள் மற்றும் நுண்ணீர்பாசனம் அமைத்து, சாகுபடிக்கு ஏற்றதாக மாற்ற இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தரிசாக உள்ள தனிப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் இருக்கும் முட்புதர்களை அகற்றி, நிலத்தை சமன் செய்து உழுவதற்கு, எக்டர் ஒன்றுக்கு, 50 சதவீதம் மானியம் அல்லது, 9,600 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. வரப்புகளில் பயறு சாகுபடியை ஊக்குவிக்க, ஒரு எக்டருக்கு, 5 கிலோ பயறு விதைக்கு 50 சதவீதம் மானியம் அல்லது, அதிகபட்சம், 300 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை பெருக்கி, மண் வளத்தை மேம்படுத்த, செயல்விளக்கத் திடல் அமைக்க எக்டர் ஒன்றுக்கு, அதிகபட்சம், 3,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. விதைத் தெளிப்பான் அல்லது பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள், 50 சதவீதம் மானியத்தில் அதிகபட்சம், 3,000 ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். விவசாயிகள், இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும்.






      Dinamalar
      Follow us