sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பதிக்கு செல்ல கொல்லம் ரயிலிலும் முன்பதிவு செய்யலாம்

/

திருப்பதிக்கு செல்ல கொல்லம் ரயிலிலும் முன்பதிவு செய்யலாம்

திருப்பதிக்கு செல்ல கொல்லம் ரயிலிலும் முன்பதிவு செய்யலாம்

திருப்பதிக்கு செல்ல கொல்லம் ரயிலிலும் முன்பதிவு செய்யலாம்


ADDED : மே 30, 2025 01:41 AM

Google News

ADDED : மே 30, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்,; 'கோவை - திருப்பதி இன்டர்சிட்டி வாராந்திர எக்ஸ்பிரஸ்க்கு மாற்றமாக கொல்லம் - திருப்பதி ரயில் இயங்குகிறது; கோவையில் இருந்து ரயில் இயங்காத நாளில், கொல்லம் ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்,' என, டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோவையில் இருந்து திருப்பதிக்கு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:22615) இயக்கப்படுகிறது. காலை, 6:10 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், மதியம், 1:20 மணிக்கு திருப்பதி செல்கிறது. மறுமார்க்கமாக, மதியம், 3:00 மணிக்கு திருப்பதியில் (எண்:22616) புறப்பட்டு இரவு, 10:20 மணிக்கு கோவை வந்தடைகிறது.

கோவையில் இருந்து புறப்படும் ரயில் ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி இயங்குகிறது; திங்கள், புதன், சனி கோவையில் இருந்து ரயில் இயக்கமில்லை.

திருப்பதியில் இருந்து புறப்படும் ரயில் (எண்:22615) ஞாயிறு, செவ்வாய், வெள்ளி இயக்கமில்லை; திங்கள், புதன், வியாழன், சனி இயங்குகிறது; வியாழன் ஒரு நாள் மட்டும் இரு மார்க்கத்திலும் ரயில் உண்டு.

இந்த ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தினசரி இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது. இந்நிலையில், கொல்லம் - திருப்பதி இடையே பயணிக்கும் ரயிலில் (எண்: 17422) கூட்ட நெரிசல் குறைவாக உள்ளது.

ரயில் பயணிகள், திருப்பதி செல்லும் பக்தர்கள் டிக்கெட் முன்பதிவுக்கு உதவ இந்த ரயில் கோவை - திருப்பதி ரயில் இயங்காத நாட்களில் (புதன், சனி) இயக்கப்படுகிறது. எனவே, டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் கொல்லம் ரயிலில் முன்பதிவு செய்து, பயணிக்கலாம் என, ரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன், சனிக்கிழமை ஆகிய இரு நாட்கள் காலை, 10:45 மணிக்கு கொல்லத்தில் புறப்படும் ரயில், மாலை, 6:35 மணிக்கு கோவை வருகிறது; திருப்பூருக்கு, 7:20 மணிக்கு வருகிறது.

திருப்பதிக்கு, மறுநாள் அதிகாலை 3:25 மணிக்கு சென்றடைகிறது என சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us