sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

டிரைவர், நடத்துனராக விண்ணப்பிக்கலாம்

/

டிரைவர், நடத்துனராக விண்ணப்பிக்கலாம்

டிரைவர், நடத்துனராக விண்ணப்பிக்கலாம்

டிரைவர், நடத்துனராக விண்ணப்பிக்கலாம்


ADDED : ஏப் 16, 2025 11:07 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள டிரைவர், நடத்துனர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள ஏழு கோட்டங்களில், 3,274 டிரைவர், நடத்துனர் பணியிடம் காலியாக உள்ளது. கோவை மண்டலத்தில், ஈரோட்டில், 119, ஊட்டியில், 67, கோவையில், 190, திருப்பூரில், 58 என மொத்தம், 344 இடங்கள் காலியாக உள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன டிரைவர் லைசன்ஸ் பெற்று, 18 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நடத்துனர் பணிக்கான சான்றிதழ் மற்றும் 'பேட்ஜ்' வைத்திருக்க வேண்டும். 2025 ஜூலை, 1ம் தேதியின்படி, 24 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், இதர பிரிவினருக்கான சலுகைகளை www.arasubus.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். எழுத்து, நேர்முகத்தேர்வு, ஓட்டுனர் பணித்தேர்வு ஆகியவற்றின் மூலம் தொழிலாளர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

வரும், 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்து கழகம் அழைப்பு விடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us