ADDED : நவ 26, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: மதுரை, வாடிபட்டியை சேர்ந்தவர் பசுபதி, 60. இவர் கடந்த, 17ம் தேதி தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்றவர் மாயமானார்.
அதன்பின், பத்மாவதி நகர் அருகே காட்டுப் பகுதியில் போதையில் மயங்கி கிடந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், 18ம் தேதி இறந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து நெறிக்கப்பட்டது தெரிந்தது.
தனிப்படை போலீசார் விசாரணையில், பசுபதியை, அழைத்து சென்ற யாசர் அராபத், 22 என்பவர், அவரை பணத்தை பறித்து கொலை செய்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

