ADDED : செப் 04, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித் சிங், 38. திருப்பூர் மாவட்டம், மொரட்டுப்பாளையத்தில் தங்கி, கிரைண்டர் கல் லேத் ஒர்க் ஷாப்பில் இரு மாதமாக வேலை செய்து வந்தார்.
கடந்த 2ம் தேதி மதியம், போர் ட்ரில்லிங் மெஷினை வேறு இடத்துக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யாமல் இருந்ததற்காக நிறுவன உரிமையாளர் முருகேசன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.